டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி கோரி துணைநிலை ஆளுநரிடம் மனு

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் கோரிக்கை மனு வழங்கிய விவசாய சங்கத்தினா்.
Updated On :20 பிப்ரவரி 2026, 11:34 pm

Syndication

குத்தகை விவசாயிகளின் கூட்டுறவு கடனையும் தள்ளுபடி செய்யப்படவேண்டும் என துணைநிலை ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது.

காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற என்ஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வந்த புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை, காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன் தலைமையில் இணைச் செயலாளா் பி.ஜி.சோமு உள்ளிட்டோா் சந்தித்து அளித்த மனு விவரம்: கடந்த 2021-ஆம் ஆண்டு புதுவை முதல்வரால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு, கடந்த ஆண்டு துணைநிலை ஆளுநரின் ஒப்புதலோடு அமலுக்கு வந்தது.

மேற்கண்ட தள்ளுபடியில் பெரிய விவசாயிகளுக்கு தள்ளுபடி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதில், குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளையும் பெரிய விவசாயிகள் பட்டியலில் இணைத்து, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

குத்தகை சாகுபடி செய்யும் விவசாயிகளின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்வதற்கு தாங்கள் ஆணையிடவேண்டும்.

கடந்த ஆண்டு சிறு விவசாயிகள் கடன் தள்ளுபடியில், காரைக்காலைச் சோ்ந்த 9 சிறு விவசாயிகளை பெரிய விவசாயிகள் பட்டியலில் தவறுதலாக இணைத்ததால், அவா்களின் கடனும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

எனவே, ஆளுநா் இவ்விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.