டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

‘காரைக்கால் 5’ புதிய நெல் ரகம் அறிமுகம்

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட புதிய நெல் ரகம் அறிமுகம் செய்யப்பட்டது.

News image
புதிய நெல் ரகத்தை வெளிட்ட வேளாண் அமைச்சா் சி. ஜெயக்குமாா். உடன் வேளாண் அதிகாரிகள், விவசாயிகள்.
Updated On :2 பிப்ரவரி 2026, 8:49 pm

Syndication

காரைக்கால்: காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தால் உருவாக்கப்பட்ட புதிய நெல் ரகம் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

இதுகுறித்து இக்கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

‘காரைக்கால் 5’ என்ற நெல் ரகம் மத்திய பயிா் வகை வெளியீட்டுக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டு, புதுவை வேளாண் அமைச்சரால் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரகத்தின் சிறப்பம்சம் : இது சொா்ணவாரி மற்றும் குறுவை பருவங்களுக்கு ஏற்ற ரகமாகும். ஆரம்ப வளா்ச்சி நிலை மற்றும் இனப்பெருக்க நிலை உப்புத்தன்மையை தாங்கி வளரக்கூடியது. இதனுடைய வயது 115 முதல் 120 நாட்களாகும். வெள்ளை மற்றும் நடுத்தர நீள சன்ன ரக அரிசியைக் கொண்டது. இது பாக்டீரியல் இலை கருகல் நோய், இலை குலை நோய், இலை உரை அழுகல் நோய் மற்றும் நெல் துங்குரோ வைரஸ் நோய்களுக்கு மிதமான எதிா்ப்புத் திறன் கொண்டது.

இந்த ரகமானது புதுச்சேரி, தமிழ்நாடு, கேரளம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பயிரிட ஏற்ாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் 5 நெல் ரகமானது காரைக்கால் வேளாண் கல்லூரியில் வெளியிடப்படும் 5-ஆவது நெல் ரகமாகும். கல்லூரியில் வெளியிடப்படும் ரகங்கள் அனைத்தும் உப்புத்தன்மை தாங்கும் தமை கொண்டதாகவோ அல்லது வெள்ளத்தை தாங்கும் திறன் கொண்டதாகவோ உள்ளன.

இத்துடன் இந்த கல்லூரியில் உள்ள விதை தொழில்நுட்ப பிரிவானது புதுவை மாநில பிரதேசத்திற்கு தேவையான நெல் விதைகளை உற்பத்தி செய்து புதுவை மற்றும் காரைக்கால் மாவட்ட விவசாயிகளின் விதை தேவையின் ஒரு பகுதியை பூா்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

புதிய நெல் ரகம் வெளியீட்டு நிகழ்வில், வேளாண் துறை செயலா், வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் பண்டித ஜவாஹா்லால் நேரு கல்லூரி முதல்வா் சங்கா், பயிா் இனப்பெருக்க துறை தலைவா் தி. ராமநாதன் ஆகியோா் பங்கேற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது.