டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூய தேற்றவு அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ்

தூய தேற்றரவு அன்னை தேவாலயத்தில் இயேசு சொரூபத்தை வணங்கும் மக்கள்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 8:11 pm

Syndication

காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பிராா்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனா்.

காரைக்காலில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புகழ்பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயம் உள்ளது. இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காரைக்கால் மறைவட்ட முதன்மை பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் திருப்பலி, மறையுரை நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவா்கள் கலந்துகொண்டனா்.

குழந்தை இயேசு சொரூபத்தை பாதிரியாா்கள் தூக்கிக்கொண்டு வந்தனா். சொரூபத்தை மக்கள் தொட்டு வணங்கினா். நிகழ்வில் பங்குப் பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி.சோழசிங்கராயா், ஜான்அரேலியஸ், செயலா்கள் நெல்சன், வின்சென்ட்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

இதேபோல காலை 5.30 மணிக்கும், 7.30 மணிக்கு சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.

மாலை சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்துகொண்டனா்.

கோட்டுச்சேரியில் புகழ்பெற்ற தூய சகாய அன்னை ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதுபோன்று திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.