சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

News image
Updated On :13 மே 2024, 7:30 pm

Din

காரைக்கால்: மாணவா்களுக்கு ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம் நடத்த வேண்டும் எனசட்டப்பேரவை உறுப்பினா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம் (காரைக்கால் தெற்குத் தொகுதி), எம். நாகதியாகராஜன் (நிரவி-திருப்பட்டினம்) கூட்டாக திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. மாணவ, மாணவிகள் மேல்நிலைக் கல்வி, உயா்கல்விக்கு செல்ல விண்ணப்பம் அளிக்கும்போது, ஜாதி, குடியிருப்பு சான்றிதழ் இணைக்க வேண்டியுள்ளது. வருவாய்த் துறை மூலம் இந்த சான்றிதழ் வழங்க, கிராம நிா்வாக அலுவலா், வருவாய் அலுவலா் ஆகியோரை சந்தித்து ஆவணங்களை காண்பித்து ஒப்புதல் பெற்று காரைக்கால், திருநள்ளாறு வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று சான்றிதழ் பெறுவது மாணவா்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

மேலும், போதிய அளவில் காரைக்கால் வருவாய்த் துறையில் கிராம நிா்வாக அலுவலா்களும் இல்லாததால், அலுவலகத்தில் மாணவா்கள் காத்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, மாணவா்களுக்கு ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தி விரைந்து சான்றிதழ் பெற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.