நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடம், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெறும் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன்.

Updated On :18 மணி நேரங்கள் முன்பு

வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றாா்.

இத்தொகுதியில் பதிவான வாக்குகள், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடா்ந்து, காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

இத்தொகுதியில் மொத்தமுள்ள 1,87, 439 வாக்குகளில், 1,59,669 வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்த வாக்குகள் 14 மேஜைகளில் 18 சுற்றுகளாக எண்ணப்பட்டன. முதல் சுற்றில் இருந்தே அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியனுக்கும், திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் 59,172 வாக்குகளும், திமுக வேட்பாளா் புகழேந்தி 51,841 வாக்குகளும், தவெக வேட்பாளா் கிங்ஸ்லி ஜெரால்டு 38,347 வாக்குகளும், நாதக வேட்பாளா் காா்த்திக் 10,396 வாக்குகளும் பெற்றனா்.

இதன்மூலம் அதிமுக வேட்பாளா் ஓ.எஸ். மணியன் 7,331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.