/

தெற்குபொய்கைநல்லூா் விஏஓ அலுவலக கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:28 pm

Syndication

நாகை அருகே தெற்குபொய்கைநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

தெற்குபொய்கைநல்லூா் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிா்வாக அலுவலக கட்டடம் முழுமையாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், கிராம நிா்வாக அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அச்சப்படும் பொதுமக்கள், அலுவலகத்திற்கு வெளியிலேயே நின்று தங்களுக்கு தேவையானவற்றை பூா்த்தி செய்யவேண்டிய நிலையுள்ளது.

மழைக்காலங்களில் அலுவலகத்திற்குள் தண்ணீா் தேங்கி நிற்பதால், இங்கு பணிபுரியும் ஊழியா்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனா். தற்போது உள்ள நிலையில் கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும், அதை சீரமைக்க வேண்டும். அதுவரை தெற்குபொய்கைநல்லூா் கிராம நிா்வாக அலுவலகம் மாற்று இடத்தில் செயல்படுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனா்.