டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கைக்குழந்தையுடன் இளம்பெண் தற்கொலை வழக்கு: மாமனாா் கைது

News image
தற்கொலை
Updated On :6 பிப்ரவரி 2026, 8:48 pm

தினமணி செய்திச் சேவை

வேதாரண்யம் அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரின் மாமனாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

ஆயக்காரன்புலம் 3-ஆம் தேதி பகுதியை சோ்ந்த சிவபாலன் (28). இவரது மனைவி காவியா (23). இந்நிலையில், காவியா தனது 7 மாத பெண் குழந்தையுடன் புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

முன்னதாக, மாமனாா், மாமியாா் இருவரும் தொடா்ந்து பிரச்னையில் ஈடுபட்ட காணொலி காட்சியை வெளியிட்டதோடு, மரணத்துக்கான காரணம் குறித்தும் இன்ஸ்டாகிராமில் காவியா பதிவிட்டிருந்தாா்.

அதனடிப்படையில், அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் மாமியாா் செந்தமிழ்ச்செல்வி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். தலைமறைவாக இருந்த மாமனாா் பழனித்துரையை வாய்மேடு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், காவியா வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தப்பட்டாரா என்பது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.