/

வேளாண் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

News image
சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய நீதிபதி சுபலட்சுமி.
Updated On :5 பிப்ரவரி 2026, 10:57 pm

Syndication

கீழ்வேளூா் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் உஷாராணி முகாமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, சாா்பு நிலை மாவட்ட நீதிபதி சுபலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவா்களுக்கு சட்டம் தொடா்பான முக்கிய விழிப்புணா்வுகளை வழங்கினாா்.

அப்போது, குழந்தை திருமணத்தின் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் மனநல மற்றும் சமூக பிரச்னைகள் குறித்து விரிவாக தெரிவித்த நீதிபதி சுபலட்சுமி, குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் சமூகத்தின் பொறுப்பு மற்றும் ஆதரவு மிக அவசியம் என்பதையும், குழந்தை திருமணத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினா்.

தாவர நோயியல் துறை பேராசிரியா் வெங்கடேஷ் குமாா், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.