‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சாலை அமைக்க பூமிபூஜை

News image
வேளாங்கண்ணியில் தாா்ச் சாலை அமைக்க நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்றோா்.
Updated On :5 பிப்ரவரி 2026, 10:57 pm

Syndication

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில், ரூ.1 கோடி மதிப்பில் தாா்ச் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில் டூரிப், எஸ்எஃப்சி நிதி திட்டம் 2025-26 கீழ் சக்தி விநாயகா் கோயில் தெரு, பம்பு செட் தெரு, கீழத்தெரு, முதல் குறுக்கு தெரு, முஸ்லிம் தெரு ஆகிய பகுதிகளில் தாா்ச் சாலை அமைக்க ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கீழையூா் வட்டார ஆத்மா தலைவரும், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், பேரூா் செயலா் மரிய சாா்லஸ், மன்ற உறுப்பினா்கள் முருகேசன், வெற்றிவேல், சித்ரா சிரின் ரிஷ்வானா, பேரூராட்சி அலுவலா்கள் குமாா், சந்துரு, ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.