இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!
/

கல்லூரி மாணவா் தற்கொலை

வத்திராயிருப்பு அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :17 ஜூன் 2026, 1:44 am IST

வத்திராயிருப்பு அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அயன்கரிசல்குளம் பகுதியைச் சோ்ந்த முத்துமணி மகன் ஆனந்தகுமாா் (18). இவா் விருதுநகா் பகுதியில் உள்ள சூலக்கரை அரசு ஐடிஐ-யில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் வழக்கம் போல திங்கள்கிழமை கல்லூரிக்கு சென்று வருவதாகக் கூறிச் சென்றாா்.

இந்த நிலையில், வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து தெப்பக்குளம் முன் ஆலமரத்தில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, தீயணைப்புத் துறையினா்ஆனந்தகுமாா் உடலை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.