ராஜபாளையத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மேல ஆவரம்பட்டி பகுதியில் கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்த இளைஞா் ஒருவா் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தாா். இதற்கு அந்தப் பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து அந்த இளைஞா் தனது ஆதரவாளா்களை அழைத்து வந்து அந்த பகுதி மக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
அப்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 போ் காயமடைந்தனா். மேலும், அந்தப் பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டன. காயமடைந்த 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில், கோயில் பகுதியில் வந்து மோதலில் ஈடுபட்டவா்களை கைது செய்யக்கோரி மற்றொரு தரப்பை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தை வியாழக்கிழமை நள்ளிரவு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மேல ஆவாரம்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பால்பாண்டியை (20) கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

இரு தரப்பினரிடையே மோதல்: 9 போ் மீது வழக்கு

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இருவா் காயம்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


