விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிக்குடி அருகே உளுத்திமடை கிழக்கு காலனியில் 60 குடியிருப்புகள் உள்ளன.
இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் செங்கமடையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், தொட்டி கட்டப்பட்ட நாளிலிருந்து அதில் தண்ணீர் ஏற்றப்பட வில்லை. இன்று வரையிலும் அந்த குடிநீர் தொட்டி காட்சிப் பொருளாகவே உள்ளது.
தற்போது இந்த பகுதி மக்களுக்கு திருப்பாச்சேத்தி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் இது போதுமானதாக இல்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.
செங்கமடையில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து அந்த மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்தாவது குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி அலசல்: விருகம்பாக்கம்! நட்சத்திரங்களின் தொகுதியில் மும்முனைப் போட்டி!
கூட்டணிக் கட்சிகளின் பலத்துடன் தேமுதிக - ஐஜேகே!

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

தொகுதி அலசல் முசிறி! திமுக - அதிமுக கடும் போட்டி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

