சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் அருகே குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் காளிராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மு.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:58 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேலக்கோட்டை சின்னையாபுரம் குறுவட்ட அளவில் நடந்த  மாணவிகளுக்கான கபாடி விளையாட்டு போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் காளிராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் மு.முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில், மாணவிகள் அணிகள் ஆர்வத்துடன் பங்கேற்ற கபாடி போட்டியை உடற்கல்வி ஆய்வாளர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் வீரார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மீசலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், 14 வயது உள்பட்ட பிரிவில் பள்ளப்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவிகளும் முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். அதோடு, இம்மாணவிகள்  மாவட்ட அளவிலான கபாடி போட்டியில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றனர்.

இப்போட்டிக்கு நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் கருணாகரன், பொன்னுச்சாமி ஆகியோர் இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.