சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

விருதுநகர் பகுதி மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு

இந்த முகாம் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ,

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:57 am

எஸ். பாண்டியன்

அனைவருக்கும் கல்வி இயக்கம் விருதுநகர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நாளை(புதன்கிழமை) நடைபெற இருக்கிறது.

இது குறித்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த முகாம் விருதுநகர் சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 6 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றுச் திறன் பரிசோதனை செய்யப்படுகிறது. அதோடு, உடனே மாற்றுத்திறனாளி அடையாள அட்டையும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,மாற்றுத்திறன் உபகரணம் தேவைப்படும் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

எனவே இப்பகுதியில் வசித்து வரும் பெற்றோர்கள் தங்களது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மருத்துவ முகாம் நடைபெறும் இடத்திற்கு நேரில் அழைத்து வந்து சிகிச்சை பெற்று பயனடையலாம் என அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.