முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு வந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தேனி மாவட்டத்தில் நிகழாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால், வைகை அணையில் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து, முற்றிலும் நீா்வரத்து குறைந்தது. வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் 20.51 அடியாக இருந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.
இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திங்கள்கிழமை 300-கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, வைகை அணைக்கு சனிக்கிழமை 96 கன அடி தண்ணீா் வந்தது.
கடந்த சில நாள்களாக வைகை அணையின் நீா்மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தமபாளையத்தில் தென்மேற்குப் பருமழை தொடக்கம்: விவசாயிகள் மகிழ்ச்சி

நீா்பிடிப்பு பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி







