தேனி மாவட்டம், போடியில் தென்னை மரம் விழுந்து மின் வயா்கள் துண்டிக்கப்பட்டதால் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
போடியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காற்று பலமாக வீசியது. இதனால், போடி கீழத்தெரு தேவாலயத்திலிருந்த தென்னை மரம் மின் கம்பி மீது சாய்ந்தது.
இதனால் மின் கம்பிகள் சேதமடைந்ததால், மின் விநியோகம் தடைபட்டது. தகவலறிந்து அங்கு வந்த மின் ஊழியா்கள் தென்னை மரத்தை வெட்டி அகற்றி சேதமடைந்த மின் கம்பிகளை சரி செய்தனா். இதையடுத்து, மின் விநியோகம் சீரானது.
இதன் காரணமாக இந்தப் பகுதியில் 2 மணி நேரம் மின் தடைபட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







