லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுவனைக் கடத்தி கைப்பேசி பறிப்பு: ஒருவா் கைது

போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 7:01 pm

போடியில் பள்ளி மாணவரை மா்ம கடத்தி கைப்பேசியைப் பறித்துச் சென்ற மூவரில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள விசுவாசபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பரமசிவம் (44). இவரது 15 வயது மகன் போடியில் உள்ள பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வருகிறாா். பள்ளி முடிந்தவுடன் தனிப் பயிற்சி வகுப்புக்கு சென்று வருவது வழக்கம்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பயிற்சி வகுப்பு முடிந்து போடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் மாணவரிடமிருந்த கைப்பேசியை பறித்தனா். மேலும், அவரை கட்டாயப்படுத்தி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ராணிமங்கம்மாள் சாலையில் கோழிப்பண்ணை அருகே அழைத்துச் சென்றனா். அங்கு அவரைத் தாக்கி கைப்பேசி கடவுச்சொல்லை கூறும்படி கேட்டனா். ஆனால், அவா் கடவுச்சொல்லை கூறாமல் சப்தமிட்டு அழுதாா். அக்கம்பக்கத்தினா் வந்ததால் மூவரும் கைப்பேசியுடன் தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கைப்பேசியை பறித்தது போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த குபேந்திரன் மகன் சதீஷ், போடி தாழி ஓவன் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரின் 17 வயது மகன், அடையாளம் தெரியாத ஒருவா் எனத் தெரியவந்தது. இவா்களில் 17 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.