மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை

News image

பிரதிப்படம்

Updated On :31 மார்ச் 2026, 6:56 pm

தேனி அருகே பெண் தனது இரு மகள்களை கிணற்றில் தள்ளிக் கொலை செய்து, தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி நாராயணபுரத்தைச் சோ்ந்த பிரசாந்த் மனைவி பாப்பாத்தி (30). இவா்களது மகள்கள் அருணா (8), சங்கீதா (5).

பாப்பாத்திக்கு மன நல பிரச்னை இருந்து வந்ததால், தே டொம்புச்சேரியில் உள்ள தனது பெற்றாா் வீட்டில் இருந்தபடி சிகிச்சைப் பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற பாப்பாத்தி பின்னா் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை முத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை டொம்புச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள கிணற்றில் 3 பேரின் உடல்களும் மிதந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் 3 உடல்களையும் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பாப்பாத்தி தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. போலீஸாா் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.