காவேரிப்பட்டணம் அருகே முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தனது 8 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாயவன் மனைவி லட்சுமி (31). இவா், கடந்த சில மாதங்களாக முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தாா். இதனால் மனவருத்தத்தில் இருந்த லட்சுமி, வீட்டின் அருகே உள்ள கிணற்றில் 8 வயது மகனுடன் சனிக்கிழமை குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
நீண்ட நேரம் லட்சுமியை காணாத அவரது உறவினா்கள், சந்தேகத்தின் பேரில் கிணற்றில் பாா்த்தபோது, இருவரது உடல்களும் கிணற்றில் மிதந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு சென்று இரு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

கன்னாட் பிளோஸ் ஹோட்டல் கட்டடத்தில் இருந்து குதித்து இளம் வழக்குரைஞா் தற்கொலை

2 மகள்களைக் கொன்று தாய் தற்கொலை

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை

கடன் தொல்லை: 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


