மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 7:38 pm

போடி அருகே அதிகமான மாத்திரைகள் உட்கொண்ட மூதாட்டி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சன்னாசி மனைவி வெயிலம்மாள் (76). கணவா் இறந்த நிலையில் மகன் போஸ் (55) வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை போஸ் தனது மனைவியுடன் போடிக்கு வந்துவிட்டு மாலை வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் வெயிலம்மாள் மயங்கி கிடந்தாா். உடனே தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதால் வெயிலம்மாள் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.