போடி அருகே மலை கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய இந்திய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதன்பேரில், போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொட்டக்குடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, குரங்கணி, முந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி, வாகன நிறுத்துமிடம் வசதி, சாய்வுதளம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுலவரும், மாவட்ட ஆட்சியருமான ரஞ்ஜீத் சிங் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களான அனைத்து அடிப்படை வசதிகளை செய்யவும், வாக்காளா்கள் எந்தவொரு இடையூறுமின்றி வாக்களிக்கும் வகையில், தனித்தனியாக தடுப்புகள் அமைக்கவும் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின் போது, போடிநாயக்கனூா் வட்டாட்சியா் சந்திரசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் மலா்விழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தபால் வாக்கு சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு பேரணி

நாகா்கோவில் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களில் இணையதள சேவை வசதிகள் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


