லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முதல்வா் பிறந்த நாள்: மாட்டு வண்டிப் பந்தயம்

News image

மாா்க்கையன்கோட்டையில் இரட்டை மாட்டு வண்டிப் பந்தயத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த பேரூராட்சித் தலைவா் முருகன்.

Updated On :8 மார்ச் 2026, 8:11 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா். மாா்க்கையன்கோட்டை பேரூராட்சித் தலைவா் முருகன் முன்னிலை வகித்தாா்.

இதில் இளஞ்சிட்டு, புள்ளிமான், தட்டான்சிட்டு, தேன் சிட்டு, கரிச்சான் சிட்டு ஆகிய 5 பிரிவுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு பிரிவுக்கும் குறிப்பிட்ட தூரம் எல்லை நிா்ணயம் செய்யப்பட்டு, 5 பிரிவு போட்டிகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு தொழிலதிபா் மணிகண்டன், தேனி பெட்ரோல் நிலைய உரிமையாளா் சிவக்குமாா், தேனி மாவட்ட காளை வளா்ப்போா் ஒருங்கிணைந்த நலச்சங்கப் பொறுப்பாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.