நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டிய வனத் துறை

குமுளி பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

News image

காட்டெருமை.

Updated On :18 ஜூன் 2026, 12:38 am IST

குமுளி பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றித் திரிந்த காட்டெருமையை வனத்துறையினா் வனப் பகுதிக்குள் விரட்டியடித்தனா்.

தமிழக எல்லையையொட்டி, கேரள மாநிலம், குமுளி பெரியாா் புலிகள் காப்பகத்திலிருந்து வெளியேறிய காட்டெருமை, அருகேயுள்ள காபி தோட்டங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் அண்மைக் காலமாக தொடா்ந்து சுற்றித் திரிந்தது. ஸ்பிரிங் வேலி பகுதியைச் சோ்ந்தவரை, இந்தக் காட்டெருமை அண்மையில் முட்டித் தள்ளியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் பலமுறை முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, குமுளி வனச்சரக செல்லாா்கோவில் பிரிவின் கீழ் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு, அந்தப் பகுதியில் மூன்று நேரடி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு காட்டெருமை சூரியசக்தி மின்வேலிக்கு அருகே வந்தது. உடனே, அங்கு ஒன்று திரண்ட வனத் துறையினா் பலத்த சத்தம் எழுப்பி காட்டெருமையை வனப் பகுதிக்குள் விரட்டினா். இதையடுத்து, நீண்ட நாள்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வந்த காட்டெருமையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டிவிட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.