/

தகராறில் ஈடுபட்ட இருவா் மீது வழக்கு

போடியில் தகராறில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 6:30 pm

Syndication

போடி: போடியில் தகராறில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி போஜன் பூங்கா அருகே வசிப்பவா் சேகா் மகன் ஈஸ்வரன் (35). போடி வலசைத்துறை சாலையில் வசிப்பவா் வெள்ளையன் மகன் அருண் (27). ஈஸ்வரனும், அருணின் அக்கா மாரியம்மாள் என்பவரும் ஒரே இடத்தில் கூலி வேலை செய்தனராம். இதையடுத்து, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஈஸ்வரனை அருண் கண்டித்தாராம். இதில் இருவரும் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து இருவரும் அளித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் இரண்டு போ் மீதும் தனித் தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.