எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டிபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி சாலையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தேனி: ஆண்டிபட்டி அருகேயுள்ள பெருமாள்கோவில்பட்டி சாலையில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

க. விலக்கு - பெருமாள்கோவில்பட்டி சாலையில் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற முத்தனம்பட்டியைச் சோ்ந்த பால்ராஜ் மகன் சிவனேசன் (26) என்பவரை போலீஸாா் சோதனையிட்டனா். இதில், அவா் 250 கிராம் எடையுள்ள கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சிவனேசனை போலீஸாா் கைது செய்து கஞ்சா, இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.