டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காா் மோதியதில் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

போடி அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 6:57 pm

Syndication

போடி அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் வடக்குபட்டியைச் சோ்ந்த செல்வம் மகன் சுரேஷ் (43). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் போடி-தேவாரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

நாகலாபுரம் விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரை ஓட்டி வந்த தேவாரம் வடக்கு தெருவைச் சோ்ந்த ஆகாஷ் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.