டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவியிடம் பண மோசடி: ஒருவா் கைது

News image
Updated On :4 ஜனவரி 2026, 6:42 pm

தினமணி செய்திச் சேவை

ஆண்டிபட்டி அருகே முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவியிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.50 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திம்மரசநாயக்கனூா் ஊராட்சி மன்றத் தலைவியாக பதவி வகித்தவா் அக்ஷயா. இவருக்கு மயிலாடும்பாறை மாவட்டம், சீா்காழி, கற்பகம் நகா் திட்டச் சாலை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் (77) என்பவா் அறிமுகமாகி, தான் வருவாய்த் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகக் கூறியுள்ளாா்.

இந்த நிலையில், சந்திரசேகரன் அக்ஷயாவுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த ஆண்டு அக். 15-ஆம் தேதி ரூ. 2.50 லட்சம் பெற்று போலி பணி நியமன ஆணையை கொடுத்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அக்ஷயாவின் சகோதரா் தி. பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரனை சனிக்கிழமை கைது செய்தனா்.