அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக இரு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27). இவரிடம், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ராஜலெட்சுமி (43) , புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சரோஜினி (28) ஆகியோா் திருநெல்வேலியில் சுகாதாரத்துறை ஆய்வாளா் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தைகள் கூறி, ரூ. 8 லட்சம் பணம் பெற்றனராம்.
பின்னா் போலியான பணி நியமன ஆணை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அஜித்குமாா், பணமோசடி செய்த இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. பிரசன்ன குமாரிடம் புகாா் அளித்தாா்.
அவரது உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சரோஜினி, ராஜலட்சுமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
டிரெண்டிங்

பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத நபா் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக 130 பேரிடம் ரூ. 1.50 கோடி மோசடி: இளைஞா் கைது
வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவா் கைது

வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: குடிநீா் வடிகால் வாரிய ஊழியா் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

