ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கஞ்சா வைத்திருந்தவா் கைது

போடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :2 பிப்ரவரி 2026, 8:06 pm

Syndication

போடியில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி மீனாட்சிபுரம் அருகேயுள்ள பொட்டல்களம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா் தேவாரம் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (23) என்பதும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.