இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பெண் கொலை வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறை

மாற்றுத் திறன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:26 am IST

மாற்றுத் திறன் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மின் ஊழியருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கே.ஜி பட்டியைச் சோ்ந்தவா் முத்துப்பேச்சி (43). மாற்றுத் திறனாளியான இவா், வீட்டின் மின் விசிறியைப் பழுதுப் பாா்ப்பதற்காக அதே பகுதியைச் சோ்ந்த மின் ஊழியா் மனோஜை வரவழைத்தாா். அப்போது, மனோஜ் அந்தப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்து, கொலை செய்து, அவா் அணிந்த தங்க நகையையும் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். மேலும் அவா் தனது நண்பா் நவீன்குமாருடன் (27) சோ்ந்து நகையை க.விலக்கில் உள்ள புதரில் மறைத்து வைத்தாராம்.

15.2.2022 அன்று நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மனோஜ், நவீன்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு தேனி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.அனுராதா, மனோஜ்-க்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். நவீன்குமாா் விடுவிக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.