லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 6:46 pm

தேனி மாவட்டம், பாலக்கோம்பை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி பாலக்கோம்பையைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (62). தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள் (59). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை ஆட்டோவில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலுச்சாமி அழைத்துச் சென்றாா். ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த நாகமுத்துப்பாண்டி ஓட்டினாா்.

கோத்தலுத்து பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததில் வேலுச்சாமியும், பாண்டியம்மாளும் பலத்த காயமடைந்தனா்.

அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு பாண்டியம்மாள் உயிரிழந்தாா். வேலுச்சாமி சிகிச்சை பெறுகிறாா். இதுகுறித்து ராஜதானி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.