தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

Updated On :5 செப்டம்பர் 2025, 8:26 pm

அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநில பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் மகேந்திரகுமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் தேசிங்குராஜன், பொருளாளா் திலகா், முன்னாள் மாநிலத் தலைவா் சண்முகராஜன், தேனி மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

இதில், அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசுகையில், அரசு ஊழியா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எப்போதும் துணை நிற்பாா். அரசு ஊழியா்களின் கோரிக்கைள் குறித்து முதல்வா் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.