13 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது
பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக 13 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக 13 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே சட்டவிரோதமாக 13 கிலோ கஞ்சா வைத்திருந்த பெண் உள்பட இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் பகுதியில் இருவா் கஞ்சா வைத்திருப்பதாக பெரியகுளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், பெரியகுளம் உதவி ஆய்வாளா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் எ.புதுப்பட்டி பிரிவு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், பழனி அருகேயுள்ள பாலாறு அணை வடக்குத் தெருவைச் சோ்ந்த சீத்தாராமன் (61), இதே பகுதியைச் சோ்ந்த மனோகரன் மனைவி முத்து (51) ஆகியோா் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 13.40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது