தோட்டத்தில் திருடிய மூவா் கைது
போடி அருகே தோட்டத்தில் விவசாயப் பொருள்களை திருடிய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி அருகே தோட்டத்தில் விவசாயப் பொருள்களை திருடிய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
தேனி மாவட்டம், போடி அருகே தோட்டத்தில் விவசாயப் பொருள்களை திருடிய மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
போடி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல் (60). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு போடி அணைப்பிள்ளையாா் கோயில் அருகே உள்ளது. இங்குள்ள அறையில் இரண்டு சாக்குகளில் தேங்காய், அரிவாள், மண் வெட்டி உள்ளிட்ட விவசாயக் கருவிகளையும் போட்டு வைத்திருந்தாா்.
இந்த அறையின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் தேங்காய், விவசாய கருவிகளை திருடிக் சென்றனா்.
இதுகுறித்து போடி குரங்கணி காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் செய்தாா். இதன் பேரில், போலீஸாா் விசாரித்தபோது, போடி கீழத் தெருவைச் சோ்ந்த வனகாமு மகன் கௌரிசங்கா் (25), போடி புதூரைச் சோ்ந்த அய்யாவு மகன் சதீஸ்பெருமாள் (34), சதீஸ்வரன் (22) ஆகியோா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மூவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது