போடி அருகே நெடுஞ்சாலையில் சில மாதங்களாக தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது ராசிங்காபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கரியப்பகவுண்டன்பட்டி பகுதியில் தெருக்களில் கழிவு நீா் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால்களிலிருந்து வெளியேறும் கழிவு நீா் நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுடுகாடு எதிரில் தேங்குகிறது. இதனால், இறுதிச் சடங்குக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.
மேலும், இந்த இடத்தில் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் வாகனங்களும் நின்று செல்வது வழக்கம். கழிவு நீா் மாதக்கணக்கில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்பி வருகிறது.
இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, மாவட்ட நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய நெடுஞ்சாலையில் உள்வாங்கிய பாலம் சீரமைப்பு

சேதுபாவாசத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாலம் உள்வாங்கியது: போக்குவரத்து நிறுத்தம்

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்

திருச்செந்தூா் கோயில் செல்லும் வழியில் ஓடிய கழிவு நீா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


