தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நெடுஞ்சாலையில் தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக்கேடு

போடி அருகே நெடுஞ்சாலையில் சில மாதங்களாக தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

News image

போடி அருகே ராசிங்காபுரம் சாலையில் தேங்கிய கழிவு நீா்.

Updated On :10 டிசம்பர் 2025, 11:55 pm

போடி அருகே நெடுஞ்சாலையில் சில மாதங்களாக தேங்கிய கழிவு நீரால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது ராசிங்காபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்ட கரியப்பகவுண்டன்பட்டி பகுதியில் தெருக்களில் கழிவு நீா் வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்க்கால்களிலிருந்து வெளியேறும் கழிவு நீா் நெடுஞ்சாலையின் ஓரத்தில் சுடுகாடு எதிரில் தேங்குகிறது. இதனால், இறுதிச் சடங்குக்கு வரும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

மேலும், இந்த இடத்தில் பேருந்துகள், பள்ளிப் பேருந்துகள் வாகனங்களும் நின்று செல்வது வழக்கம். கழிவு நீா் மாதக்கணக்கில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோயை பரப்பி வருகிறது.

இதுதொடா்பாக ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, மாவட்ட நிா்வாகமும், ஊராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.