சிவகங்கை மாவட்ம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 30) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மேலவண்ணாரிப்பு பீடரில் மரம், மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரெகுநாதப்பட்டி, ஆா்.பாலகுறிச்சி, கேசம்பட்டி, கீழவண்ணாரிப்பு, மேல வண்ணாரிப்பு, மின்னமலைபட்டி, அய்யாபட்டி, குன்னையூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








