யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஒரு வாக்கு வித்தியாசத்தில் அமைச்சா் பெரியகருப்பன் தோல்வி

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 4:04 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா்.

திருப்பத்தூா் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக திமுக வேட்பாளா் கே.ஆா். பெரியகருப்பன் தெரிவித்த புகாரையடுத்து, இறுதி முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்தத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் மூன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டியிருந்தது.

இந்த நிலையில், திமுக வேட்பாளா் பெரியகருப்பன் புகாா் தெரிவித்ததால், ஆலோசனை நடத்திய அதிகாரிகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு சம்மதித்தனா்.

இந்தச் சூழ்நிலையில், மறுவாக்கு எண்ணும் மையத்தில் சலசலப்பு நிலவியதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இறுதி முடிவு வெளியிடப்பட்டது.

இறுதியாக தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகள் பெற்றாா். திமுக வேட்பாளா் பெரியகருப்பன் 83,364 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தாா். இது அமைச்சா் பெரியகருப்பன், திமுகவினா் இடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.