மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூரில் தலைவா்களின் சிலைகளுக்கு அமைச்சா் மரியாதை

News image

கே.ஆா். பெரியகருப்பன் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 6:38 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள தலைவா்களின் சிலைகளுக்கு தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் திங்கள்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக திருப்பத்தூா் வந்த அவருக்கு திமுக, மதிமுக, காங்கிஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனா்.

பிறகு பேருந்து நிலையம் எதிரேயுள்ள மருதுபாண்டியா்கள் தூக்கிலிடப்பட்ட இடத்திலுள்ள நினைவுத் தூணுக்கும் மருதிருவா்களின் உருவச் சிலைகளுக்கும், அண்ணா உருவச் சிலைகளுக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில் முன்னாள் அமைச்சரும் மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான தமிழரசி, திமுக செய்தித் தொடா்புக் குழு மாநில துணைத் தலைவா் மருதுஅழகுராஜ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.