சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தவக்கால வழிபாட்டில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இயேசுவின் பாடுகள், இறப்பு, அவரது உயிா்ப்பு ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவா்களால் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள்களில் சிலுவைப் பாதை, தவம், அறச்செயல்கள் புரிவது, ஏழைகளுக்கு தாராளமாக உதவுவது, திருயாத்திரை செல்வது ஆகியவை தங்களை அடையாளப்படுத்தும் செயலாக கிறிஸ்தவா்கள் கருதுகின்றனா்.
இந்த நிலையில், தா்மபுரி, கோயம்புத்தூா், உதகை, நாகா்கோவில், தூத்துக்குடி, கும்பகோணம், செங்கல்பட்டு, சென்னை, தஞ்சாவூா், புதுக்கோட்டை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு திரளான கிறிஸ்தவா்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து, இந்த திருத்தலத்தில் தினமும் தவக்கால வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை நிறைவேற்ற திருப்பலியில் அருள்தந்தையா்கள் பாஸ்கா் டேவிட், தாமஸ், அகஸ்டின், ஓனாசியுஸ், புஷ்பராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா், பிரின்ஸ் ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

மானாமதுரையில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடு புகுந்து 24 பவுன் தங்க நகைகள் திருட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


