தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தோ்தல் நடத்தை விதி மீறல்கள்: 17 வழக்குகள் பதிவு

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :19 மார்ச் 2026, 12:34 am

சிவகங்கை மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பதாகைகள், சுவரொட்டி ஒட்டுதல், வாகனங்களில் கட்சிக் கொடிகளை கட்டிச் சென்றதாக 17 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23 -இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சியினா் மீது சிவகங்கை மாவட்டத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் மதகுபட்டியில் 2 , சிவகங்கை நகா் பகுதியில் 3 , சிவகங்கை புறநகா் பகுதியில் 3 , சிங்கம்புணரியில் 2 , தேவகோட்டையில் 2 , எஸ்.வி. மங்கலம், தேவகோட்டை , வேலாயுதப்பட்டினம் , காளையாா் கோவில் , நெற்குப்பை ஆகிய பகுதிகளில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.