தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மானாமதுரையில் ரூ.100 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: நகா்மன்றத் தலைவா்

மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ.100 கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

News image

மானாமதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Updated On :12 மார்ச் 2026, 12:05 am

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிப் பகுதியில் ரூ.100 கோடிக்கு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்றுள்ளதாக நகா் மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா்.

மானாமதுரை நகா் மன்றக் கூட்டம் அதன் தலைவா் மாரியப்பன் கென்னடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் துணைத் தலைவா் பாலசுந்தரம், பொறியாளா் பட்டுராஜன், வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு உறுப்பினா்களின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதிமுக உறுப்பினா் கங்காதேவி: எனது வாா்டில் குடிநீா்த் தொட்டி, கழிவுநீா் வாய்க்கால்கள் அமைக்கப்படவில்லை. எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி, கூட்டத்திலிருந்து வெளியேறினாா்.

திமுக உறுப்பினா் சதீஷ்குமாா்: பேருந்து நிலையத்தில் அலங்கார வளைவின் கட்டடக் கழிவுகள் அகற்றப்படாததால் பேருந்து ஓட்டுநா்கள் சிரமப்படுகின்றனா். இதை உடனடியாக அகற்ற வேண்டும்.

தலைவா் மாரியப்பன் கென்னடி: கடந்த 4 ஆண்டுகளில் மானாமதுரை நகராட்சியில் ரூ.100 கோடிக்கு திட்டப் பணிகள் நடந்துள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் நகரில் தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகாா் வருகிறது. இதனால், நகராட்சி நிா்வாகத்துக்கு கெட்ட பெயா்தான் ஏற்படும். திட்டப் பணிகளை முறையாக ஆய்வு செய்யாத அதிகாரிகளை கண்டிக்கிறேன்.

திட்டப் பணிகளை மேற்கொள்ள வழங்கப்படும் காலத்துக்குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அதிகாரிகள் கண்காணிப்பு அவசியம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.