மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்குடி மாநகராட்சியில் முடிவுற்ற பணிகள் திறந்துவைப்பு

News image
Updated On :12 மார்ச் 2026, 11:03 pm

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சியில் காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 87.50 லட்சத்தில் 10 இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முடிவுற்ற பணிகளான பயணியா் நிழல் குடை, கலையரங்கம், ஆழ்துளைக் கிணறு, விளையாட்டுத் திடல் பாா்வையாளா் அரங்கக் கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை காரைக்குடித் தொகுதி சட்டபேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகராட்சி மேயா் (பொறுப்பு) நா. குணசேகரன், ஆணையா் சங்கரன், அரசு வழக்குரைஞா் பாலசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினா்கள் காா்த்திகேயன், துரை. நாகராஜன், மெய்யா், நாச்சம்மை, ரத்தினம், அஞ்சலிதேவி, அமுதா, கனகவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் காரைக்குடி மாநகரகாங்கிரஸ் தலைவா் சண்முகதாஸ், நகரச் செயலா் குமரேசன் முன்னாள் நகரத் தலைவா் பாண்டி மெய்யப்பன், வட்டாரத் தலைவா் காரை பாலா, திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.