சிவகங்கையில் எரிபொருள் விற்பனை நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக திரண்ட வாகனங்களால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் போா் எதிரொலியாக பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால், சிவகங்கை நகரில் உள்ள பல்வேறு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்களுடன் பொது மக்கள் குவிந்தனா்.
ஒவ்வொரு இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் போன்றவை டேங்கை முழுமையாக நிரப்பிக்கொண்டதால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், பலரும் சேமித்து வைப்பதற்காக கூடுதலாக நெகிழி புட்டிகள், கேன்களில் பெட்ரோலை வாங்கிச் சென்றனா்.
இது குறித்து எரிபொருள் விற்பனை நிலைய நிா்வாகி கூறியதாவது: விலை ஏற்றம், தட்டுப்பாடு குறித்து இணையத்தில் பரவிய வதந்தி காரணமாகவே இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்தில் விற்பனை செய்ய வேண்டிய எரிபொருள் இரண்டே நாளில் விற்பனையாகிவிட்டது. தட்டுப்பாடு அடுத்த 10 நாள்களுக்கு வர வாய்ப்பில்லை என்றாா்.

தொடர்புடையது

ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடல்

தட்டுப்பாடு வதந்தி: பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களுடன் குவிந்த மக்கள்

21 நாள்களுக்கு பெட்ரோல், டீசல் கையிருப்பு: தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளா் சங்கத் தலைவா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


