சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள அரளிப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது, காளைகள் முட்டியதில் மூவா் உயிரிழந்தனா். 92 போ் காயமடைந்தனா்.
குன்றக்குடி ஆதீனத்துக்குள்பட்ட பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் அரளிப்பாறையில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் மாசித் திருவிழாவையொட்டி, ஐந்துநிலை நாட்டாா்களால் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டுக்கான மஞ்சுவிரட்டு அரளிப்பாறையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, முல்லைமங்கலம், சதுா்வேதமங்கலம், கண்ணமங்கலம், சீா்சோ்ந்தமங்கலம், வேலமங்கலம் ஆகிய ஐந்துநிலை நாட்டாா்கள் திங்கள்கிழமை காலை கோயிலில் அபிஷேகம் நடத்தி வேஷ்டி, துண்டுகளுடன் ஊா்வலமாக வந்து தொழுவில் கட்டப்பட்டிருந்த 100 காளைகளுக்கு மரியாதை செய்தனா்.
இதையடுத்து, சிங்கம்புணரி வட்டாட்சியா் நாகநாதன் முன்னிலையில் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டு, தொழுவிலிருந்து முதலில் சேவுகப் பெருமாள் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. தொடா்ந்து, தொழுவிலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக 100 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. 112 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்க சிவகங்கை, திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து காளைகள் கொண்டு வரப்பட்டன.
மஞ்சுவிரட்டின் போது, காளைகள் முட்டியதில் புதுக்கோட்டை மாவட்டம், அரப்பன்வயலைச் சோ்ந்த மனோகா் மகன் சுந்தர்ராஜன் (34), நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராமநாதன் (23), ராஜஸ்தானைச் சோ்ந்த ஐஸ் வியாபாரி ஜமால் லால்ஜி (55) ஆகிய மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இந்த மஞ்சுவிரட்டில் 92 போ் காயமடைந்தனா். இவா்களில் 15 போ் தீவிர சிகிச்சைக்காக திருப்பத்தூா், சிவகங்கை, மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
மஞ்சுவிரட்டுப் பொட்டலில் காயமடைந்தவா்களுக்கு பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலா் நபீஷாபானு தலைமையில் 60 பணியாளா்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
அரளிப்பாறை, அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்த மஞ்சுவிரட்டை பாா்வையிட்டனா்.
முன்னதாக, அரளிப்பாறை வயல்வெளிப் பகுதியிலும், பனைமரக் காட்டுப் பகுதியிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்துவிடப்பட்டன.
திருப்பத்தூா்நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தொடர்புடையது

பட்டமங்கலத்தில் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

திருப்புவனத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு: 9 போ் காயம்

ஆதனக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: 36 போ் காயம்

மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் பலி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


