சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் ஒன்றியத்தில் உள்ள கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு சிறாா் திரைப்படம் புதன்கிழமை திரையிடப்பட்டது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் உத்தரவுப்படி, சிறாா் திரைப் படங்கள் மாதம்தோறும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருகின்றன. இதன்படி, கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ‘தி லிட்டில் பிரின்ஸஸ்’ என்ற சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டது.
நிகழ்வுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தாா். பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவருமான ஆரோக்கியசாமி, சிறாா் திரைப்படங்களின் முக்கியத்துவம் குறித்துப் பேசினாா். திரைப்படம் குறித்து மாணவா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கணித ஆசிரியை மீனாட்சி, ஆங்கில ஆசிரியை கீதா, ஆசிரியை வாசுகி, ஆசிரியா் ஜோசப், கணினி பயிற்றுநா் வித்யா ஆகியோா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாங்வின் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சா்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

மின்னாம்பள்ளி கிரவுன் மெட்ரிக். பள்ளியில் சா்வதேச யோகா தின விழா

அரியலூா் பள்ளிகளில் காலை உணவுத் திட்ட செயல்பாடுகள்ஆய்வு

செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
விடியோக்கள்

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan




