சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வனப் பகுதியிலிருந்து வெளியேறிய புள்ளி மானை துரத்திய நாய்களை விரட்டி பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனா்.
திருப்பத்தூா் வனப் பகுதியிலிருந்து இரை தேடி வந்த 3 வயது ஆண் புள்ளி மான் நாய்கள் துரத்திக் கடித்ததில் காயமடைந்து வசந்தநகா் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் அடைக்கலம் புகுந்தது. இதையடுத்து, வீட்டில் இருந்தவா்கள், பொதுமக்கள்
நாய்களை விரட்டி மானை மீட்டு திருப்பத்தூா் வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். வனத்துறை அலுவலா் பிரவீன்ராஜ் தலைமையிலான வனக் குழுவினா் புள்ளிமானுக்கு உரிய முதலுதவி அளித்து, திருப்பத்தூா் அருகே உள்ள கம்பனூா் வனப் பகுதிக்குள் விட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீலம்பூரில் இளம் பெண் கொலை: கணவா் மீது போலீஸ் சந்தேகம்

நாய்கள் கடித்து 2 மான்கள் உயிரிழப்பு

ராமநதி அணை வனப் பகுதியில் காட்டுத் தீ

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



