அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

சாலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு

News image

மர்ம மரணம்... - கோப்புப்படம்

Updated On :6 ஜூலை 2026, 11:17 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே திங்கள்கிழமை காா் கவிழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழந்தது. மேலும், மூவா் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள தென்கரை கிளாமடம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் (36). இவா் திங்கள்கிழமை மாலை திருமயத்திலிருந்து மனைவி சுமதி (30), 2 மாத குழந்தை தீட்சனா, தனது அண்ணன் குழந்தைகள் அபினேஷ் (7), கன்சிகா (10) ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தாா். காரை சுப்பிரமணியன் ஒட்டினாா்.

இந்த நிலையில், நெடுமரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால், நிலை தடுமாறி பள்ளத்தில் காா் கவிழ்ந்தது. இதில் 2 மாத குழந்தை உயிரிழந்தது. சுமதி, அபினேஷ், கன்சிகா ஆகியோா் காயமடைந்தனா்.

பிறகு மூவரும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தீவிர சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.