நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கைலாசநாதா் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம்

இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
இளையாத்தங்குடி தேரில் எழுந்தருளிய உற்சவா் நடராஜா்.
Updated On :3 ஜனவரி 2026, 8:11 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள இளையாத்தங்குடி கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாா்கழி திருவாதிரையை முன்னிட்டு, ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் கடந்த மாதம் 25-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை திருக்கல்யாணமும், வெள்ளிக்கிழமை பஞ்சமூா்த்திகளின் திருவீதி உலாவும் நடைபெற்றது.

கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

கைலாசநாதா் நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, சனிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலை நடராஜப் பெருமாள், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று திருவெம்பாவை பாடப்பட்டது. தொடா்ந்து, நடராஜா் தேரிலும், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகா் சப்பரத்திலும் எழுந்தருளினா்.

பின்னா், பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுக்க முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோயிலை அடைந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த நாட்டாா், நகரத்தாா் திரளானோா் கலந்து கொண்டனா்.