டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சிலம்பம் போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 9:46 pm

Syndication

சா்வதேச சிலம்பம் போட்டியில் வெற்றிபெற்ற சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரை மன்னா் திருமலை நாயக்கா் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இரண்டாவது சா்வதேச அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, துபை, சுவிட்சா்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

இதில் ஒற்றைக் கம்பு போட்டியில் காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரணிதா முதலிடம் பெற்றாா். மூன்றாம் வகுப்பு மாணவா் ஹரிஷ்லிங்கம் இரண்டாமிடம் பெற்றாா்.

இந்த இருவரையும் பள்ளியின் தாளாளா் நாராயணன், செயலா் நா. காா்த்திக், ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்தினா்.