பாலியல் வன்கொடுமை: கல்லூரி மாணவா் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமை- File photo| EPS
Updated On :5 பிப்ரவரி 2026, 9:46 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பள்ளி மாணவியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கல்லூரி மாணவா் மீது புதன்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ‘
பதினெட்டான்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ் (21). கல்லூரி மாணவரான இவா் மானாமதுரை பள்ளியின் 11-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மானாமதுரை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இதன் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி மாணவா் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தலைமறைவான மாணவரைத் தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...